ACUSIDDHA developed by Dr.V.Pandikumar MBA, MD (Acu)

Wednesday, January 26, 2011

அருகம்புல்

சித்த வைத்தியத்தில் மிகவும் சிறப்பாகக் கூறப்படும் ஒரு செடி அருகம்புல்லாகும். அதன் மகத்துவம் எண்ணிலடங்காதது.

அருகம்புல்லின் மருத்துவத் தன்மையைப் பார்ப்போம்.

1.அருகம்புல் [Cynodon doctylon]

முழுத்தாவரமும் இனிப்புசுவையும்,குளிர்ச்சித் தன்மையும்
உடையது.உடல் வெப்பத்தை அகற்றும்,சிறுநீர் பெருக்கும்,குடல் புண்களை ஆற்றும்,
இரத்தை தூய்மையாக்கும்,உடலை பலப்படுத்தும்,
கண் பார்வை தெளிவுபெறும்.
அருகம்புல் பச்சையத்தில் அதிக அளவு
கரோட்டினாய்டுகள் உள்ளன.
இதைப்பற்றி மேலும்,


“அருகம்புல் வாதபித்த ஐயமோ டீளை
சிறுக அறுக்கும் இன்னுஞ்செப்ப அறிவுதறும்
கண்ணோ யோடு தலைநோய் கண்புகை யிரத்தபித்தம்
உண்ணோ யொழிக்கு முரை” [அகத்தியர்]

அருகம்புல் சாற்றை தினமும் காலை குடித்துவர
தோல் நோய்கள்,இரத்தமூலம்,வயிற்றுப்புன்,சிறுநீர் எரிச்சல்,
பெண்களுக்கு இரத்தக்குறைவால் ஏற்ப்படும் வெள்ளை,
மருந்துகளினால் ஏற்படும் ஒவ்வாமை ஆகியன தீரும்.
இதன் சாற்றை தனித்தும் பால்கலந்தும் குடித்துவரலாம்.

No comments:

Post a Comment